2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தொண்டமானாறு கடற்கரை பொலிஸாரால் சுத்திகரிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல்  தினத்தையொட்டி  வல்வெட்டித்துறை பொலிஸார், தொண்டமானாறு கடற்கரையை சனிக்கிழமை (19) சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வருடம் செப்டெம்பர் மாதத்தில் வரும் 3ஆவது சனிக்கிழமையன்று, சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையில், கடற்கரையில் காணப்பட்ட பொலித்தீன்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கண்ணாடி என்பன வௌ;வேறாக பிரித்தெடுத்து அகற்றப்பட்டன.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தலைமையில் இந்த நடவடிக்கை காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணிவரையில் வல்வெட்டித்துறை மேற்கொள்ளப்பட்டது.

இச்செயற்பாட்டுக்கு வல்வெட்டித்துறை நகரசபை ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .