2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் முன்பாக வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும்  விரைந்து நியமனம் வழங்குமாறு கோரி இவர்கள் போராட்டம் செய்தனர்.

அவர்களைச் சந்தித்த முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர், 6 மாதங்களுக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .