2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திருட்டு மாட்டை இறைச்சியாக்கியவருக்கு விளக்கமறியல்

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

திருடிய மாட்டை இறைச்சியாக்கிய நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும், மாட்டை இறைச்சியாக்க தனது காணியை வழங்கிய பெண்ணை 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளைஇ திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.

வரணி, கறுக்காய் பகுதியில் நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் இறைச்சியினை வைத்து, அதனை தனது சாறத்தால் மூடி வடமராட்சி பகுதிக்கு கடந்த 08ஆம் திகதி கொண்டு சென்றிருந்தார்.

இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கறுக்காய் பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், சந்தேகநபரை மடக்கி பிடித்ததுடன் 30 கிலோகிராம் இறைச்சியினை கைபற்றியிருந்தனர்.  

இவ்வாறு கைதானவர் துன்னாலை பகுதியினை சேர்ந்தவர் என்றும், பிறிதொரு நபர் திருடிக் கொடுத்த மாட்டை இறைச்சியாக்கி அதனை, வடமராட்சி பகுதியில் உள்ள கொத்து றொட்டி கடைகளுக்கு விற்பனை செய்யவதற்காக எடுத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்தது. மேலும், இறைச்சியாக்குவதற்கு இடத்தை வழங்கிய தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையும் கைது செய்தனர்.

இறைச்சியை எரியூட்டுவதற்கும், மாட்டைத் திருடிக் கொடுத்த சந்தேகநபரை கைது செய்யவும் பதில் நீதிவான்இ பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X