2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருடனுக்கு கடூழிய சிறை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குப்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீட்டில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடிய குப்பிளான் பகுதியினைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கு 18 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.

சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக மேற்படி திருட்டு தொடர்பான வழக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இதன்போது சந்தேக நபர், தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, நீதவான் 18 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .