Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கைதான கொடிகாமம், தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, குறித்தப் பெண் மன்றில் மயங்கி விழுந்த சம்பவமொன்று, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்றது.
பல தடவைகள் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் குறித்தப் பெண், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்டபெண்ணை புதன்கிழமை(30) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது மன்றில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த பெண்ணின் நடவடிக்கைகள் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மன்றில் கூறுகையில், 'முன் குற்றச்சாட்டுக்கள் பல இவருக்கு இருந்தும் மேற்படி பெண் தொடர்ச்சியாக கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார்' என நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும், இதனால் அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, நீதவான் 1 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெண் மன்றில் மயங்கி வீழ்ந்தார்.
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago