2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திருமண வீட்டுக்கு சென்றவர்களின் வீட்டில் திருட்டு

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொக்குவில் பழைய தபால் கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) பகல் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ள அனைவரும் திருமண வீட்டுக்கு சென்றிருந்த சமயமே இத் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X