2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருமணமான பெண்ணை கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை கத்தி முனையில் கடத்திச்சென்று காட்டுக்குள் வைத்திருந்த இருவரையும் ஒக்டோபர்; மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், வியாழக்கிழமை (24) உத்தரவிட்டார்.

திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு சந்தேகநபர்கள், செவ்வாய்க்கிழமை (22) காலையில் கத்தி முனையில் கடத்திச் சென்றனர். இது தொடர்பில் பெண்ணின் கணவன், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், முதலில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து வேலணைக் காட்டுப் பகுதியிலிருந்து பெண்ணும், கடத்தலில் ஈடுபட்ட மற்றைய நபரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள், பெண்ணைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகித்த பொலிஸார், மூவரையும் வைத்தியசாலையில அனுமதித்து வைத்திய அறிக்கையைப் பெற்றனர்.

இந்த வைத்திய அறிக்கையுடன் சந்தேகநபர்கள், இருவரும் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .