2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தேர்வேலைப்பாட்டுக்கு வைக்கப்பட்ட மரக்குற்றிகளை திருடிய மூவர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
ஆவரங்கால் கண்ணாரையம்மன் இராஜராஜேஸ்வரி ஆலய தேர் வேலைப்பாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள், மற்றும் பலகைகளை திருடிய சந்தேக நபர்களை இரகசிய பொலிஸார் வெள்ளிக்கிழமை (16) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட படிரக வாகனம், மற்றும் திருடப்பட்ட மரக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான மூவரும் புன்னாலைக்கட்டுவன் மத்தலோடை பகுதியினை சேர்ந்த 25, 22 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும் அதில்  பாடசாலை மாணவன் ஒருவனும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று,  கோயில் வளாகத்துக்குள் புதன்கிழமை (14) இரவு நிற்பதை அவதானித்த அப்பகுதி கடை உரிமையாளர் ஒருவர் அங்கு சென்று பார்த்த போது, வாகனத்தில் வந்த மூவர் தேர்வேலைப்பாடுகளுக்கு வைத்திருந்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை ஏற்றி தப்பிச் சென்றுள்ளனர்.

உடனடியாக வாகன இலக்கத்தினை குறித்துக் கொண்ட கடை உரிமையாளர் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாகன உரிமையாளரை விசாரணை செய்த போது, குறித்த வாகனத்திற்கு லீசிங் பணம் செலுத்த வசதி இல்லாத காரணத்தால் திருடியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைதான 17 வயதான சிறுவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக கூறிய பொலிஸார், இச் சிறுவன் ஏற்கெனவே பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு, பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டுள்ளான் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X