2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திருவிழாக்களை முன்னிட்டு நல்லூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

நல்லூர் ஆலய உற்சவ பெருந்திருவிழாக்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நிலையில், ஆலய சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நல்லூர் உற்சவகாலம் ஆரம்பமானது முதல் அடியார்களினது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் நல்லூர் ஆலய பெருந்திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன. இதற்காக அடியார்களினது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 24 மணிநேரம் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் சீருடையிலும் சிவிலிலும் ஈடுபடவுள்ளனர்.

திருவிழாக்காலங்களின் போது அடியார்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் அல்லது குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக 011-3024294 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிடலாம். 

அத்துடன், பாதுகாப்புக் கடமைகளுக்காக மேலதிக பொலிஸார் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியார்கள் தாம் அணிந்துவருகின்ற ஆபரணங்கள் மற்றும் தமது உடைமைகள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும்.

மேலும், ஆலயத்துக்கு குடும்பமாக வரும் அடியார்களில் குறிப்பாக சிறுபிள்ளைகளுடன் வருகை தருவோர் தனித்தனியாக பிரிந்து செல்லாமல் ஒன்றாகச் செல்வதன் மூலம் இடையூறுகளைத் தவிர்த்துக் கொள்ளமுடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .