Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து 4 கட்சிகள் இருக்கும் நிலையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 தேசியப் பட்டியல் ஆசனங்களை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கியமையானது தவறான செயல் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இது தொடர்பில்; ஆனந்தசங்கரியினால் வியாழக்கிழமை (27) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்தமை கூட்டமைப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரமான முடிவை ஏனைய மூன்று கட்சிகளும் வன்மையாக எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.
சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நியமனம் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நியாயமானதும் பொறுத்தமானதுமாகும். ஏனெனில், யுத்தம் அதிகமாக நடைபெற்ற முல்லைத்தீவில் அவர் வசித்து வந்தவர். கூட்டமைப்பின் விடயத்தில் நான் ஏன் தலையிடுகின்றேன் எனக் கேட்டால், இதைச் செய்தவருக்கு இது புதிதல்ல.
தமிழர் விடுதலைக் கூட்டணியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இரண்டும் சகோதரக் கடசிகள். ஒருவரோடு ஒருவர் முரண்பட முடியாது. அத்தகைய முரண்பாடு இரண்டையும் பாதிக்கும். ஒன்றுக்கு எது பிழையோ அது மற்றதுக்கும் பிழையாகவே இருக்கும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சிக்கு கூறும் அறிவுரை என்னவெனில் ஏனைய கட்சிகளின் தயவாலேயே நீங்கள் நிலைத்து நிற்க முடியும். ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்கள் உயிரையும், உடல் உறுப்புக்களையும் மட்டுமல்ல சிலர் உலகத்தில் உள்ள அத்தனையும் இழந்துள்ளனர் என்பதை தமிழரசுக் கட்சி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்' என அவ்வறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago