2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தலையை உலர்த்தியவர் மரணம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

தோய்ந்துவிட்டு தலையை உலர்த்தியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) மாலை, சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான கோபாலு உதயகுமார் (வயது 56) என்பவர் உயிரிழந்தார்.

கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கும் இவர் ஆலயம் செல்வதற்காக தோய்ந்துவிட்டு, தலையை உலர்த்திக் கொண்டிருந்த போது, மயங்கி வீழ்ந்துள்ளார்.

உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் கூறப்பட்டது.

சடலம், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X