2025 ஜூன் 25, புதன்கிழமை

நீதிமன்ற உத்தரவை அவமதித்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சமுதாயச் சீர்திருத்த பணியை மேற்கொள்ளாமல் தலைமறைவாகியிருந்த நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.

திக்கம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர், பொது இடத்தில் மது  அருந்திய குற்றத்துக்காக 80 மணித்தியாலங்களுக்கு சமுதாயச் சீர்திருத்தப் பணியை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை நீதிமன்றத்தால் கடந்த மாதம் பணிக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் சமுதாயச் சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளும் போது, மேற்படி நபர் சமூகமளிக்காமையால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிடியாணையின் பிரகாரம் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .