2025 ஜூன் 25, புதன்கிழமை

நீதிமன்ற உத்தரவுக்கமைய குண்டு செயழிழக்க வைப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளாலி, கச்சாய் பகுதியிலுள்ள களப்பில் மீனவரின் வலையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு, நேற்று வெள்ளிக்கிழமை (11) சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செயழிழக்க வைக்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சாய் களப்பு பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், இது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

மேலும், குறித்த கைக்குண்டை செயழிக்க வைப்பதற்குரிய கட்டளையின் பொலிஸார், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் கோரியிருந்தனர். இதன் போது குண்டு செயழிப்பதற்குரிய கட்டளையினை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் வழங்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .