Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் சான்றுப்பொருட்கள் வைக்கும் காப்பகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த சான்றுப்பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை, நேற்று திங்கட்கிழமை (21) இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து, திங்கட்கிழமை (21) நீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்ட போது, காப்பகத்திலிருந்த சான்றுப்பொருளான 27 கிலோ 600 கிராம் எடையுடைய கஞ்சா காப்பகம் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டதுடன், சனிக்கிழமை (19) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) ஆகிய தினங்களில் நீதிமன்றத்தில் கடமையிலிருந்த காவலாளிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப்பட்டன.
கிடைக்கப்பெற்ற விசாரணைகளிலிருந்தே குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனி, ஞாயிறு தினங்களில் கடமையிலிருந்த காவலாளிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது என கிளிநொச்சிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
39 minute ago
43 minute ago
2 hours ago