2025 ஜூன் 28, சனிக்கிழமை

நீதிமன்றத் தாக்குதல் விவகாரம்: இருவருக்குப் பிணை

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை (06) பிணை வழங்கினார்.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து சரீர பிணைகளிலும் ஒவ்வொருவரும் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.

நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், விடுவிக்கப்பட்டவர்கள் தவிர, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 18 பேர், நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இருவருக்கு பிணை வழங்கியதுடன், மிகுதி 16 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவர்களுக்கு எதிராக, நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸாரை அடித்துக் காயப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனங்களை சேதமாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .