2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவற்குழி புகையிரத பாலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 6 மணியளவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அமிர்னதாப் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

2 இளைஞர்கள் ஒன்றாக நீராடிக்கொண்டிருந்த நிலையில், மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X