Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியாவில், சிங்கள மொழி மூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி புதன்கிழமை (23) இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா தெற்கு மற்றும் வெலிஓயா கல்வி வலயங்களில், சிங்கள பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சிங்கள மொழிமூல ஆசிரியர்களே, தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி செவ்வாய்க்கிழமை (22) முதல், இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 30 பேர் வரையில் பங்கு பற்றிய இந்த போராட்டம், வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்றது. அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், கலந்துகொண்ட ஆசிரியர்கள், தம்மை ஆசிரியர் சேவை 3-II இல் உள்வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago