2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நீலங்காட்டு கடற்படை முகாமை அகற்றக்கோரிக்கை

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

காரைநகர், நீலங்காட்டு பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றி, மீனவர்கள் அப்பகுதியை இறங்குதுறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைநகர் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (29) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, இவ்வாறு கோரிக்கை  முன்வைக்கப்பட்டது.

தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, கடற்படை படகுகளுக்கு அருகில் செல்வதால், தமது மீன்பிடி படகுகள் சேதமடைவதுடன், வலைகளும் அறுக்கப்படுகின்றன. எனவே, அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இது தொடர்பில் கடற்படையினருடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X