2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நல்லெண்ணெய் விற்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

லேபள் ஒட்டாமல் நல்லெண்ணெய் மற்றும் நெய் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகருக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (28) தீரப்பளித்தார்.

சங்கானை பொதுச் சுகாதார பரிசோதகர் தாக்கல் செய்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். வர்த்தகரை எச்சரிக்கை செய்த நீதிவான், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X