2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நல்லூர் ஆலயத்துக்குள் நுழைய காவடிகளுக்குத் தடை

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்த உற்சவத்தின் போது, பல இடங்களிலிருந்து ஆலயத்துக்கு வருகை தரும் தூக்கு, பறவை காவடிகள் ஆலயத்தின் முன்பகுதிக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காவடிகளை எடுத்து வருபவர்கள், குபேர வாசல் கோபுர பகுதியில் தங்கள் காவடிகளை இறக்கி, அதன் பின்னர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்ய முடியும் என்றும் துலாக்காவடி வாகனங்கள் உட்செல்ல அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்த்திருவிழா அன்று காலை 10 மணிக்குப் பின்பே காவடிகள் ஆலய வளாகத்துக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படும்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா, நாளை வெள்ளிக்கிழமையும் (11) தீர்த்தோற்சவம் சனிக்கிழமையும் (12) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .