2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நல்லூர் இசை நிகழ்வில் வயலின் இசைத்தவர் மரணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் ஆலய மகோற்சவத்துக்காக நடைபெற்றுக்கொண்டிருந்த இசை நிகழ்வொன்றில் வயலின் வசித்துக்கொண்டிருந்த வயலின் வித்துவான், மாரடைப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ளார்.

நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், வயலின் வசித்த வயலின் வித்துவான் உருத்திரபதி ராதாகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நல்லூர் மகோற்சவத்துக்காக துர்க்கா தேவி மணி மண்டபத்தில் தினமும் இசை நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. வழமை போன்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு திருவிழா முடிவடைந்ததும் இசை நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த இசை நிகழ்வில் வயலின் வாசித்துக்கொண்டிருந்த போது வயலின் வித்துவானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட பின்னர் அவர் உடனடியாக அம்பியூலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னரே அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .