Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கடந்த 1995ஆம் ஆண்டு புக்காரா விமானக் குண்டு தாக்குதலில் பலியாகிய 21 மாணவர்கள் நினைவாக, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி, நாளை செவ்வாய்க்கிழமை (22) திறந்து வைக்கப்படவுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு நினைவுத்தூபியை திறந்து வைக்கவுள்ளார்.
விமானக் குண்டுத் தாக்குதலில் போது, வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் பலியாகியிருந்தனர். இவர்களின் நினைவாக நினைவுத்தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஜூன் மாதம் 5ஆம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
36 minute ago
2 hours ago