2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது: 30 வரை விளக்கமறியல்

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரை, நாளை திங்கட்கிழமை (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் சனிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

வாதரவத்தைப் புத்தூர் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் நபருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (27), முல்லைத்தீவு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் இவரை கைது செய்த பொலிஸார், இவரை மல்லாகம் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதே தினத்தில் அவரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .