2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண் உத்தியோகத்தரை தாக்கிய பெண்கள் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தினுள், வியாழக்கிழமை (08) புகுந்து, பெண் உத்தியோகத்தரை தாக்கிய இரு பெண்களைக் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார், வியாழக்கிழமை (08) தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பிரதேச செயலகத்தில் பெறவேண்டிய கையெழுத்தை பெறுவதற்காக வந்திருந்த இரு பெண்களே, குறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.

பிரதேச செயலக ஊழியர்கள் வழங்கிய தகவலையடுத்து இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .