2025 ஜூன் 25, புதன்கிழமை

புத்தகத்தை அடகு வைத்தவர் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஆட்டோ பதிவு புத்தகத்தை அடகு வைத்துவிட்டு, புத்தகத்தைக் காணவில்லையென பொய் முறைப்பாடு செய்த பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (14) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், தனது ஆட்டோவின் பதிவுப் புத்தகத்தை மற்றுமொரு நபரிடம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இதன் பின்னர் தனது ஆட்டோவின் பதிவுப் புத்தகம் தொலைந்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதுடன் முறைப்பாட்டின் பிரதியை கொண்டு புதிய புத்தகம் பெறும் முயற்சியில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளார்.

ஆட்டோவின் பதிவுப் புத்தகத்துக்காக பணம் கொடுத்தவர், இது தொடர்பில் அறிந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரை கைது செய்து பொலிஸார் விசாரணை செய்த போது, சந்தேகநபர் புத்தகத்தை அடகு வைத்தமை, பொய்முறைப்பாடு செய்தமை ஆகியவற்றை ஒப்புக்கொண்டார்.

மோசடி செய்ய முயற்சித்தமை, பொலிஸாரை ஏமாற்றி பொய் முறைப்பாடு பதிவு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .