2025 ஜூலை 19, சனிக்கிழமை

பூநகரி பகுதியில் ஐஸ் தொழிற்சாலை அமைத்து தருமாறு வேண்டுகோள்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்றினை உருவாக்கும்படி கிளிநொச்சி மாவட்டச் செயலரிடமும் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திடமும் பூநகரி கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பூநகரியில் பெருமளவு கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவினை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்வதற்கு ஐஸ் கட்டிகள் அவசியமானது.

இப்பகுதியில் ஐஸ் தொழிற்சாலை இல்லாததன் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய கடலுணவை பாதுகாப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

தாம் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் இப்பகுதியில் ஐஸ் தொழிற்சாலையை அமைத்து தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X