2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பூம்புகாரில் விரைவில் பொலிஸ் கண்காணிப்பகம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

அரியாலை பூம்புகார் பகுதியில் பொலிஸ் கண்காணிப்பகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்.யூ.கே.வூட்லர் தெரிவித்தார்.

பூம்புகார் பகுதியில் கோஷ்டி மோதல், வாள்வெட்டு, குடும்ப பிணக்குகள், மதுபோதையில் குழப்பம் விளைவித்தல் ஆகிய செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூம்புகார் பகுதி மக்கள் சிலர் யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

மக்களின் முறையீட்டின் அடிப்படையில், பூம்புகார் பகுதியிலுள்ள தேவாலயத்தில் மக்கள் சந்திப்பொன்றை வூட்லர், ஞாயிற்றுக்கிழமை (06) மாலை ஏற்பாடு செய்திருந்தார்.

'இந்தப் பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு உபபொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துடன் கலந்துரையாடப்படும். அதுவரையில் இப்பகுதியில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்காணிப்பார். அவர் தினமும் இப்பகுதிக்கு விஜயம் செய்து, நிலைமைகளை பார்வையிட்டு குழப்பமான விடயங்கள் நடைபெற்றால் அது தொடர்பில் விவரங்களை சேகரிப்பார்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .