Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
தேசிய பாரிசவாத சங்கத்தின் ஒத்துழைப்புடன், சுகாதாரக் கல்விப் பணியகம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு இணைந்து, பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியை தேசிய ரீதியில் நடத்தவுள்ளது.
இந்தப் போட்டிக்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றலாம்.
'ஆரோக்கிய வாழ்க்கை முறைகளின் மூலம் பாரிசவாதத்தைத் தடுப்போம்' என்ற தலைப்பில் ஏ - 3 அளவுள்ள தாளில் முழுப்பக்கத்தில் தமக்கு விரும்பிய நிறங்களைப் பயன்படுத்தி சித்திரங்களை வரைந்து அனுப்ப முடியும்.
போட்டியாளர்கள் தங்கள் சித்திரங்களின் பின்புறத்தில் பெயர், கல்வி கற்கும் வகுப்பு பாடசாலையின் பெயர், அதிபரின் கையொப்பம், மாவட்டத்தின் அமைவிடம் என்பவற்றைக் குறிப்பிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் சுகாதார கல்விப் பணியகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
54 minute ago
1 hours ago