Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.
கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வியாழக்கிழமை (15) மாலை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் மதுபோதையில் ஏறிய இருவர் நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர்.
கருத்து முரண்பாடு அதிகரிக்கவே, இருவரும் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கி விட்டு தப்பி சென்றிருந்தனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார் துன்னாலை பகுதியினை சேர்ந்த இருவரை வெள்ளிக்கிழமை (16) கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago