2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாரம்பரிய விதை தானியங்களை பாதுகாக்க வேண்டும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

உணவு தன்னாக்கத்துக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் உலக உணவு தினத்தையொட்டி 'பாரம்பரிய விதை தானியங்களை பாதுகாக்க வேண்டும்' என்னும் தொனிப்பொருளிலான பேரணி,  கிளிநொச்சியில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது.

கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி, ஏ - 9 வீதி வழியாக கிளிநொச்சி கூட்டுறவு கல்லூரிக்குச் சென்றடைந்து, அங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டு மக்களுக்கு நஞ்சற்ற போசாக்கான உணவை தகுந்த விலையில் பெற்றுக்கொடுத்தல், இயற்கை உரங்களை பயன்படுத்தல், பாரம்பரிய விதைகளை பயன்படுத்தல், இயற்கை சுற்றாடல் கட்டமைப்பின் பாவனையை விருத்தி செய்தல், இரசாயன உரத்தைக் கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X