2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

போலி நாணயத்தாள் வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி நகரப் பகுதியிலுள்ள கடையொன்றில் போலி நாணயத்தாளைக் கொடுத்து பொருட்கொள்வனவு செய்ய முற்பட்ட உரும்பிராய் சேர்ந்த நபருக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன், நேற்று புதனக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அச்சுவேலி நகரப் பகுதியிலுள்ள கடையொன்றுக்குச் சென்ற நபர், 1,000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து பொருட்கொள்வனவு செய்ய முற்பட்டபோது, கடைக்காரரால் பிடிக்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

 நபருக்கு எதிரான போதிய சாட்சியங்களை அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மன்றில் சமர்ப்பித்திருந்தார். 

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X