2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புல்லு வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மூளாய் சுழிபுரம் பகுதியிலுள்ள வயலில், புல்லு வெட்டுவதற்குச் வியாழக்கிழமை (15) மாலை சென்றவர், வயல் கிணற்றிலிருந்து, வெள்ளிக்கிழமை (16) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த ஆழ்வார் பாலகிருஸ்ணன் (வயது 68) என்பவரே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டார்.

மாட்டுக்குப் புல் வெட்டச் சென்றவர், தவறிக் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X