Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்
கோப்பாய் சந்திப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று, மின்கம்பத்துடன் திங்கட்கிழமை (05) இரவு மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், புலோலி தெற்கு கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த சிவகுரு மணிமாறன் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு கடமைக்காக வந்து கொண்டிருந்த போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago