2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸிடம் கைவரிசை: இராணுவ சிப்பாய் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பொலிஸ் அதிகாரி ஒருவரின் அலைபேசியைத் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காங்கேசன்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரை நேற்று புதன்கிழமை (09) கைது செய்ததாக  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி, அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸார் ஒருவரின் அலைபேசி திருடப்பட்டது.

இது தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தொலைந்து போன அலைபேசி பாவனை தொடர்பான தகவல்கள்,  தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்டது.

பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு, திருடப்பட்ட அலைபேசியை பாவனை செய்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து அலைபேசியை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .