2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொலிஸாருக்கு போக்கு காட்டிய கனரக வாகனம் துரத்திப்பிடிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், பாலாவி பகுதியிலிருந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனத்தை நீண்ட நேரமாக துரத்திவந்த கொடிகாமம் பொலிஸார், மீசாலை பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (01) இரவு கைப்பற்றினர்.

எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர்.

மணல் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனத்தை மறித்தனர். எனினும், அந்த வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றதையடுத்து, பொலிஸார் வாகனத்தை துரத்தினர்.

இதன்போது, மணல் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்த மணலை, சவல்கள் மூலம் பொலிஸாரின் வாகனத்தின் மீது எறிந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், வாகனத்தை கைவிட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பித்துச் சென்றதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.

இதேவேளை, பாலாவி பகுதியில் இருந்து உழவு இயந்திரமொன்றில் மணல் கடத்திய 3 சந்தேகநபர்களையும் கொடிகாமம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .