2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பசுக்களை கடத்திய இருவர் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி 4 பசுமாடுகள் மற்றும் 2 கன்றுகளை சிறிய ரக லொறியில் கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (28) இரவு அச்சுவேலி சந்திப்பகுதியில் வைத்து கைது செய்ததாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கதிரிப்பாயை பகுதியிலிருந்து புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு மாடுகளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்தபோது, வீதிப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .