2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறையிலிருந்து வவுனியாவுக்கு மேலதிக பஸ் சேவை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து வவுனியாவுக்கு மேலதிகமாக ஒரு பஸ் சேவையை இன்று செவ்வாய்க்கிழமை (29) முதல் நடத்தவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

பிற்பகல் 3 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து புறப்படும் இந்த பஸ், நெல்லியடி, கொடிகாமம் ஊடாக 6 மணிக்கு வவுனியா சென்றடையும். தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு, அதேவழியாக இரவு 10 மணிக்கு பருத்தித்துறையை வந்தடையும் என்றார்.

இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே 3 சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருத்தித்துறையிலிருந்து காலை 6.45, 7.45, 11.00 ஆகிய நேரங்களில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டும், 

அதேவேளை, வவுனியாவிருந்து 11.00, பிற்பகல் 12 மணி, 4.00 மணி ஆகிய நேரங்களில் இருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டும் தற்போது நடைபெற்று வருகின்றது.

இவற்றுக்கு மேலதிகமாகவே இவ் பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .