2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம்: வைத்தியசாலைக்குச் சென்றார் மாவை

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரவணபவ ஆனந்தன் திருச்செந்தூரன்

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, உடற்கூற்று பரிசோதனை இடம்பெறும் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற தகவலினால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்தனர். இதனையடுத்து, அங்கு மாவை சேனாதிராசா மற்றும் வலிகாமம் வடக்கு முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் விஜயம் செய்தனர்.

உடற்கூற்று பரிசோதனை இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர்கள் மாணவர்களின் இறப்பு தொடர்புடைய விவரங்களுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபரின்; கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் என்று தெரியவருகின்றது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X