2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட 10 நாட்கள் அனுமதி!

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபை யினர் அறிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலய பரிபாலன சபை யினர், இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

அதற்கான அனுமதி இராணுவத்தினரிடமிருந்து தற்போது கிடைத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் குறித்த 10 நாட்களும் குறித்த நேரகாலப் பகுதியில் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X