2025 ஜூலை 19, சனிக்கிழமை

பள்ளிக் கல்வியாளர்கள் விசேட பொதுக் கூட்டம் நாளை

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடமாகாண சிரேஷ்ட பள்ளிக் கல்வியாளர்கள் ஒன்றியத்தின் விசேட பொதுக் கூட்டம், ஒன்றியத் தலைவர் ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர்  ப.விக்கினேஸ்வரன்   தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சனிக்கிழமை (09) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கல்விச் சமூக மேம்பாட்டில் ஆர்வமுள்ள ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர்களும் அதிபர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கல்விப்புலத்தின் மேம்பாட்டிற்கான தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

தூயநகரம் மாணவர்களுக்கான வழிப்படுத்தலும், பள்ளிக் கல்வியின் பின்னரான செயற்பாடுகளும், சமூக இடையூறுகளைக் களைதல் சம்பந்தமான செயற்றிட்டங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக ஒன்றியச் செயலாளர் ஓய்வுநிலை அதிபர் ச.சிவநேஸ்வரன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X