2025 ஜூன் 28, சனிக்கிழமை

பஸ் பின்னால் ஓடிய மூதாட்டி கீழே விழுந்து பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ்ஸூக்கு பின்னால் ஓடிச் சென்ற முதாட்டியொருவர், கீழே விழுந்து , வியாழக்கிழமை (01) உயிரிழந்துள்ளதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழ்ந்த 75 வயதுடைய மூதாட்டியினுடைய சடலம், இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.

சுட்டிபுரம் அம்மன் கோவில் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடமொன்றில், குறித்த பஸ் பயணிகளை ஏற்றியுள்ளது. எனினும் பயணிகளை ஏற்றிக்கொண்டிருக்கும் போது, அந்த மூதாட்டி அங்கு இருக்கவில்லை என்று பஸ் நடத்துநர் தெரிவித்தார்.

தரிப்பிடத்திலிருந்து பஸ் புறப்பட்டதும், திடீரென பஸ்ஸின் பின்பக்கமாக தடியொன்று முறியும் சத்தம் கேட்டதும் பஸ்ஸை நிறுத்தி பார்த்த போது, பஸ்ஸின் பின்னால் சுமார் 6 மீற்றர் தூரத்தில் வயோதிப் பெண்ணொருவர் கையில் முறிந்த கிழுவைத் தடியுடன் முகம் குப்பற வீழ்ந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பஸ் சாரதி மற்றும் நடத்துநரைக் கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி வயோதிப் பெண், பஸ்ஸில் ஏறுவதற்காக பின்னால் ஓடிவந்து கீழே வீழந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் கூறினர்.

மேற்படி வயோதிப் பெண், சுட்டிபுரம் அம்மன் கோவில் பகுதியில் தங்கியிருந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .