2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் கிராமசேவையாளர் படுகாயம்

Thipaan   / 2016 மார்ச் 05 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கிராமசேவையாளர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற இ.போ.ச பஸ்ஸுடன் மோதி, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடனும் மோதி விபத்துக்குள்ளானது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (04) சந்நிதி வீதி பத்தமேனி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவத்தில் வளலாய் வடக்கு பகுதி கிராமசேவையாளரான எஸ்.சாந்தரூபன் (வயது 50) என்ற உத்தியோகத்தரே பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் மற்றும் முச்சக்கரவண்டியினை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X