2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில்,  ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம், இன்று (25) இரவு7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச்சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன், கடையும் சிறிதளவு சேதமடைந்துள்ளது.

தனிப்பட்ட தகராறே இத்தாக்குதல் மேற்கொள்ள காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .