2025 ஜூலை 16, புதன்கிழமை

பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தம்

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(04) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஐவர் திடீரென தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் கடமைக்கு செல்லாது புறக்கணித்து வந்ததையிட்டு அவர்களுக்கு கடந்த மே மாதம் முதல் சம்பளம் வழங்ப்படவில்லை எனவும், இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கு அறிவித்ததையடுத்து இவ்வாறு போராட்டத்தில்  ​ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டு, அவர்களுக்கான வேதனம் வழங்கப்படாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் எனவும் ​அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .