Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சார்பாக அழைக்கப்பட்ட மூவரையும் ஜனாதிபதி சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதியை உடனடியாக யாழிலிருந்து வெளியேறுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, இன்று (19) புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பாக மூவரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவித்து பொலிஸார் அழைத்துச் சென்றிருந்தனர்.
எனினும் அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி மூவரையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதியை உடனடியாக யாழிலிருந்து வெளியேறுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
48 minute ago
1 hours ago