2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முகமூடி நபர்கள் தாக்கியதில் இளைஞன் படுகாயம்

Administrator   / 2016 மே 02 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மருதனார்மடம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்குள் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை புகுந்த 5 பேர் கொண்ட குழு, அங்கு கள் அருந்திக்கொண்டிருந்த இளைஞனை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணுவில் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X