2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் 06 சிறுவர்கள் காயம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

தனியார் கல்வி நிறுவனத்துக்கு சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று, கெருடாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 6 சிறுவர்களில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்ததுடன், 4 சிறுவர்கள் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.

சரசாலை தெற்கைச் சேர்ந்த அன்ரன் தவராசா கோபிகா (வயது 10) என்ற சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், அதேயிடத்தைச் சேர்ந்த கோபிராஜ் சஜித்தா (வயது 10) என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றனர். மிகுதி 4 சிறுமிகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X