2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் படுகாயம்

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி வைத்தியசாலைக்கு அருகில், இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த செல்லையா கணபதிபிள்ளை (வயது 81) என்ற முதியவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார்; தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்,எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில்,  சைக்கிளில் பயணித்த வயோதிபர், படுகாயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X