2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மூடப்படும் நிலையில் நடராஜானந்தா வித்தியாலயம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஓமந்தை இரம்பைக்குள பிரதேசத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கிவரும் நடராஜானந்தா வித்தியாலயம் மூடப்படும் நிலையயை எதிர்நோக்கியிருப்பதாக பாடசாலை சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஓமந்தை பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் குறித்த பாடசாலை நிரந்தராமக மூடப்படும் நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அண்மையில் இயங்கி வரும் இந்த பாடசாலை 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் காரணமாக மறவன்குள பாடசாலையுடன் இணைந்து இயங்கிவந்துள்ளது.

போருக்கு முன்னர் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வந்த நிலையில் 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வெவ்வேறு பிரதேசங்களில் இந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இதேவேளை,  குறித்த பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் 5 குடும்பங்களே அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.

மக்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் காணியில் ஓமந்தை சோதனை சாவடிக்காக இராணுவத்தனரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .