2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மீண்டும் சேவையில் இணைந்த பாதை

Gavitha   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

இந்தப் பாதைச் சேவையானது, நாளொன்றுக்கு 6 தடவைகள் என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால், இலவசமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள், மோடடார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவற்றை கொண்டுச் செல்லக்கூடியதாக இருந்தது.

எனினும் கடந்த மார்ச் மாதம் முதலாவது வாரம் தொடக்கம் இந்தப் பாதை பழுதடைந்தது. இதனால், இரண்டு இடங்களுக்கும் கட்டண அடிப்படையிலான படகு சேவை ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழுதடைந்த பாதையை திருத்தம் செய்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், அதனை மீண்டும் சேவையில் இணைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X